இரண்டாம் உலகப் போரில், அமெரிக்கா ஆயுத தளபாடங்களை பிரித்தானியாவிற்குத் தான் விற்றது. இதனால் தான் அமெரிக்கா அசுர வளர்ச்சி அடைந்தது, மற்றவர்கள் சண்டை பிடித்துக்கொண்டிருக்கையில். கவனிக்கவேண்டிய விடயம், பிரித்தானிய உரிமையாளர் அமெரிக்காவில் தொழில் தொடங்கி ஆயுதங்கள் செய்யப்படவில்லை.
இன்றைய கால கட்டத்தில், வெளி நாட்டு வியாபாரிகள் இந்தியாவிலோ (அ) வேறு நாடுகளில் தங்கள் தொழிலைத் தொடங்கி அவர்கள் காசு கறக்கிறார்கள். இதனால் உள்நாட்டு வியாபாரி பெரிதும் போட்டி போட முடியாமல் இருக்கிறது.
வெளிநாட்டு வியாபாரம் நம் நாட்டிற்குள் வருவதால் தொழில் வாய்ப்பு கிடைக்கிறது என்பது உண்மைதான்.
ஆனால், வெளிநாட்டவன் நம்மை வைத்து, நம் நாட்டிலேயே உழைக்கிறான் என்பதும் உணமை தான்.
கேள்வி நம் நாடு முன்னேறுகிறதா? நம் நாட்டு மக்கள் முன்னேறுகிறார்களா?
அதற்காக நம்மவர்கள் வெளிநாட்டிற்குச் சென்று நல்லா தானே முன்னேறி வாழ்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். இது நம் நாட்டின் வளர்ச்சி அல்ல. நம் நாட்டு மக்களின் முன்னேற்றம் இல்லை. இது நம் நாட்டின் மனித வளம் வெளியேற்றம். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு மனிதனின் செலவாணிப் பங்கு குறைந்து விட்டது. அதே நேரத்தில், வெளிநாட்டில் இருப்பவர் பணத்தை சொந்த நாட்டிற்கு அனுப்பினால் சொந்த நாட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. இப்படித் தான் இலங்கைத் தமிழர்கள் [அரசில் பதிந்த வியாபாரி மூலம்] அனுப்பும் பணம் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது.
ஏன் வெளிநாடுகள் திறைமைசாலிக்கு அதிக சம்பளம், சலுகை என்று கொடுத்து தம் நாட்டுக்கு எடுக்கிறார்கள்? அவரின் மேல் உள்ள மனிதாபிமான அக்கறையா? இல்லவே இல்லை. இவரால் தம் நாடு முன்னேறும் என்பதால்.
கனடாவில், குடும்பத்தை அழைத்துக்கொள்ளலாம் [sponser]. ஏன் இப்படி செய்கிறார்கள்? குடும்பமும் இங்கே வந்து விட்டால், இவர் தன் தாய் நாட்டுக்குத் திரும்பிப் போகவேண்டும் என்ற எண்ணம் மிகக் குறைவாகிவிடும். குடும்பத்திற்கு என்று இந்த நாட்டிலிருந்து வெளியேறும் கனடாப் பணம் இல்லாதொழிந்து விடும். ஆகவே கனடாப் பணம் கனடாவிற்குள்ளேயே நிற்கும்.
ஏன் சும்மா இருக்க பணம் கொடுக்கிறார்கள்? [welfare] பாவம் என்று பார்த்தா? இல்லை. பணம் இல்லையாயின் இவன் அதைத் தேடி வேறு நாட்டிற்கு போய்விடுவான். அப்படி அவன் போகாவிட்டாலும், நாட்டில் பஞ்சம் அதிகரித்து விடும். இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு தான் பிரச்சனை. இந்தக் காசை எடுப்பவன் என்ன செய்கிறான்? அவ்வளவத்தையும் இந்த நாட்டுக்குள்ளேயே செலவழிக்கிறான். ஆகவே, தன்னை அறியாமலேயே அவன் இந்த நாட்டு பொருளாதாரத்தை உருட்டிக்கொண்டிருக்கிறான். பொருளாதாரம் தாழ்ந்துவிடக்கூடாது என்று தான் அரசாங்கமும் சும்மா இருக்கப் பணம் கொடுக்கிறது.
பல்கலைக்கழகத்தில் படிக்க இங்கு இலவசம் அல்ல. இருந்தாலும், அரசாங்கம் வட்டி இல்லாமல் பணத்தை கடனாக உதவி செய்யும். ஏன், பாவம் படிக்கட்டும் என்றா? படித்து வருபவர்கள் பணக் கஷ்டத்தால் படிக்காமல் விட்டால் நாட்டில் அறிவாளிகள் குறைந்து விடுவார்கள். பிறகு வெளிநாட்டிலிருந்து அறிவாளிகளை வாங்க வேண்டி ஏற்படும்.
மேலே சொல்லப்பட்டவை பொதுவுடமை சிந்தனையாகத் தான் தெரிகிறது.
கனடாவை ஒரு குழந்தை என்பார்கள். ஏனெனில் மற்றய நாடுகள் போல் கனடாவிற்கு ஒரு நீண்ட வரலாறு ஏதும் இல்லை. கனடா என்று உருவாகியே சில வருடங்கள் தான் [மற்றய நாடுகளுடன் ஒப்பிடும்போது]. தன்னை வளர்த்துக்கொள்ள கனடா இப்படி சலுகைகள் கொடுக்கிறது. முன்பு சும்மா இருக்க பணம் கொடுக்கும் முறையில் [welfare] அதிக பணம் கொடுத்தார்கள். வேறு பல சலுகைகள், உதவிகள் என்று பல. இப்போது அவை குறைந்து விட்டன. ஏனெனில், கனடாவில் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பணம் இல்லை என்றில்லை. தேவை குறைகிறது. முன்பு குடும்பத்தாரை அழைக்க கட்டணமாக $500 கட்டவேண்டி இருந்தது [அதற்கு முதல் என்ன என்று எனக்குத் தெரியாது]. இப்போது $1,500 கட்ட வேண்டி உள்ளது. மூன்று மடங்காக உயர்ந்து விட்டது. தேவை குறைகிறது. வட்டி இல்லாமல் பணம் கொடுத்து அறிவாளிகளை இங்கேயே உருவாக்குகிறார்கள். அதனால், வெளிநாடுகளிலிருந்து அறிவாளியை கொண்டுவரவேண்டிய கட்டாயம் குறைகிறது.
இதை இன்னொரு விதமாகவும் எடுக்கலாம். அதாவது உள்நாட்டு மக்களை முன்னேற வழி சமைக்கிறது. வெளிநாட்டவர் படிக்க பல்கலைக்கழகங்களின் கட்டணமாக மூன்று மடங்கிற்கு மேல் கட்ட வேணும்
, உள்நாட்டவரை விட.
மொத்தமாக பார்த்தால், நாட்டின் வளர்ச்சிக்காக பல சலுகைகள் செய்து வெளிநாடுகளிலிருந்து மனித வளம் மற்றும் பொருளாதரத்தை இறக்குமதி செய்தார்கள். அதே வேளையில், நாட்டில் இருப்பவர்களையும் பாதுகாத்து அவர்களை முன்னேற்றவும் செய்கிறார்கள். எதிர்காலத்தில், நாட்டில் இருப்பவர்களை மட்டும் பார்த்தால் போதும். வெளிநாட்டு உதவி தேவை இல்லை.
வேடிக்கை என்னவென்றால், இங்கு என் நாடு கனடா என்று சொல்லி மார்தட்டி பிதட்டிக்கொள்பவர்கள் எவருமில்லை. எலும்பே உறைந்து போகுமளவிற்கு குளிர். சூறாவளி என்பதுபோல், இங்கு பனிச் சூறாவளி அனேகமாக ஒவ்வொரு பனிக்காலமும் எங்காவது வந்துவிடும். வருடத்தில் 4 மாதங்கள் தான் வெக்கை காலம். வீதியில் விழுந்த பனியை அகற்றுவதற்கே கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். இவ்வளவு இயற்கை அனர்த்தங்களுக்கும் இடையில் நாடு வளர்ச்சி அடைகிறது. கனடாவின் குளிர் பற்றி சொல்வதென்றால், அதற்கே என்று ஒரு கட்டுரை எழுதலாம். எங்கள் நாடுகளில் இப்படி எல்லாம் இல்லாமல் இருந்தும் முன்னேறவில்லை.
என்னமோ எதோ செய்து நாட்டை முன்னேற்றுவதில் வெள்ளைக்காரன் மிகக் கெட்டிக்காரன் தான் என்பதை மறுக்க இயலாது.
_____
CAPital