- தமிழீழ தேசிய கீதத்தில் மதம் சம்பந்தப்பட்ட எந்த சொல்லும் வரக் கூடாது.
- இந்தக் காரணத்தால் தான் “வந்தே மாதரம்” பாடமாட்டோம் என்று இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்.
- தமிழர் என்ற ரீதியில் சொற்கள் இருக்கவேண்டுமேயொழிய வேறு மத, பிராந்திய சம்பந்தப்பட்டதாக இருக்கக் கூடாது.
- தேர்வு செய்யும் சொற்கள் எளிமையான சொற்களாக, பெரிய சொற்கள் அற்றதாக இருத்தல் வேண்டும்.
- தமிழில் பண்டிதம் இல்லாதவரும் பாடக்கூடியதாக, ஈழம் விட்டு அயல்நாடுகளில் வேறு மொழி பேசும் ஈழத்தவர் சந்ததியும் பாடக்கூடியவாறு சொற்கள் இலகுவாக இருத்தல் நலம்.
- பாடல் வீரத்தை பொங்கி எழ வைப்பதாக இருக்கக் கூடாது.
- இது தேசிய கீதம். போருக்குப் போவதற்காக பாடப்படுவதாக அமையக் கூடாது.
- தமிழர் ஒற்றுமையை மேலோங்கச் செய்வதாக இருத்தல் வேண்டும்.
- தமிழன் அரசு வளர போற்றுவதாக அமைதல் நலம்.
- இசையமைக்கும்போது வேகமாக பாடி முடிப்பதாக இருக்கக் கூடாது.
- அமைதியாக தொடங்கி மெதுவாக வேகங் கூட்டி முடிவதாக அமைதல் நலம்.
- பாடல் இரண்டு [2] நிமிடம் தாண்டி பாடப்படுவதாக இருக்கக் கூடாது.
- மிகவும் குறுகியதாகவும் இருக்கக் கூடாது.
_____
CAPital
தமிழருக்கு என்று ஒரு தேசமும் அந்த தேசத்திர்க்கு என்று ஒரு கீதமும்…………!
ஆண்ட தலைமுறை ஆழட்டும் நினி ஒரு முறை….!
Comment by முரளி — October 20, 2006 @ 11:03 pm |
தமிழா தமிழா நாம் தலைநிமிர்த நாடு நம் தமிழீழதாய் நாடு காலம் சொல்லும் தமிழருக்கு என்று ஒரு தனிநாடு அது தமிழீழ தாய்நாடு
Comment by ரூபஸ் — June 25, 2010 @ 7:08 am |