ஒரு பார்வை

July 28, 2006

தமிழ் ஒருங்குறி ?! -14

Filed under: Tamil Unicode — CAPitalZ @ 10:42 am

நான் சொன்ன தமிழ் எழுத்துக்கள் யாவற்றையும் கணினியில் ஏற்றுதல் என்பது, விசைப்பலகையில் [keyboard] ஏற்றுதல் என்பதல்ல.

பேச்சுக்குச் சொன்னால் கணினியின் மூளையில் ஏற்றுவது. அதாவது ஒருங்குறி என்பது விசைப்பலகை அல்ல. அது ஒரு தகுதரம் [Standard for Computer Information Interchange]். அந்த தகுதரத்தில் தமிழை சரியாக ஏற்றியிருக்கலாம்.

இப்ப எத்தனை கீகள் விசைப்பலகையில் இருக்கிறதோ, அத்தனையே வைத்திருக்கலாம். வேணுமென்றால், கூட்டி (அ) குறைத்துக் கூட வைத்திருக்கலாம்.

அதாவது ஃபிரஞ்சு, ஜேர்மன், ஸ்பானிய மொழிகளில் உள்ளது போல் தமிழிலும் எல்லா எழுத்துக்களையும் ஏற்றியிருக்கலாம். à, á, â, ã, å̀́ இவை இங்கே காண்பது போல் ஒரு எழுத்தாகவும், பிரித்து தனித் தனியாகவும் a, ̀, ́, ˆ, ˜, ˚ ஏற்றப்பட்டிருக்கிறது.

இனிமேல் தமிழுக்கு அவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை தான். அப்படி கிடைத்தாலும் ஏற்கனவே இப்போதிருக்கும் ஒருங்குறியில் ஊறிப்போனவர்கள் மாற்றத்தை விரும்ப மாட்டார்கள்.

அப்ப பிறகேன் இந்தக் கதறல்?
விட்டது பிழை என்று ஒத்துக்கொள்ளலாம்ல… இல்லை. தமிழ் மொழி இப்படித் தான். எழுத்தை ஒழுங்குமாறி வைத்து பிரித்து பிரித்து சேர்த்தால் தான் தமிழ் கணினியில் தெரியும். இல்லையேல் தமிழ் பிழையாகிவிடும். சும்மா ஏமாத்தக்கூடாது எல்லே.

தமிழ் மொழியின் எழுத்தின் வகைகளைப் புரிந்து கொள்ள எழுத்தைப் பிரித்துதான் சேமிக்க வேண்டிய அவசியமில்லை. கணினிக்கு எழுத்து தெரிவதில்லை, அதற்குண்டான இலக்கம் மட்டுமே தெரியும். அந்த இலக்கத்தை வைத்து இது எந்த மெய், எந்த உயிர் என்று அறியலாம். [TUNE இல் அப்படி செய்திருக்கிறார்கள்]

ஏன் தமிழில் கையாளும்போது இவ்வளவு சிரமம், வேகக் குறைவு, சேமிக்க அதிக இடம் என்று சாதரண கணினி உபயோகிக்கும் தமிழனுக்கு தெரியாது. அவன் சிந்தனையில் தமிழ் மொழி கணினியில் இப்படித் தான் இருக்கும் என்று மட்டுமே அறிந்திருப்பான். அவன் ஒரு ஃபிரஞ்சு, ஜேர்மன், ஸ்பானிய, சீனா, ஜப்பான், (அ) கொரியா மொழி தெரிந்தவனாக இருந்தால், தமிழில் எழுதுவதை விட அந்த மொழியில் எழுதினால் சகலவிதத்திலும் மேன்மை என்று யோசிப்பான். இன்றய காலத்தில் தமிழ் தெரிந்திருந்தாலும், ஆங்கிலத்தில் எழுதுவது இலகுவாக இருப்பது போல்.

கணினியில் ஒரு மென்பொருள் தயாரிக்கும் போது மிகவும் முக்கியமானது அந்த மென்பொருள் மிகவும் வேகமாக செயற்பட வேண்டுமென்பது. தமிழில் கணினி மொழியை [programming in Tamil script] எழுதினால் வெறும் எழுத்தைக் கையாள்வதற்கே ஒரு பகுதி வேகம் போய்விடும். பற்றாததற்கு, அந்த மென்பொருளின் சேமிக்கும் இடம் கூட அதிகமாகும். மென்பொருளை கணினிக்கு இறக்குமதி செய்ய காலம் காத்திருப்பவர்களுக்கு இது இன்னும் பெரிதாக்கும். இதையெல்லாம் அறிந்த ஒரு கணினி மொழி [computer programming்] வல்லுனர் ஒருபோதும் தமிழை கணினி மொழியாக தேர்ந்தெடுக்க மாட்டார். வெறும் பல்கலைக்கழகங்களில் சோதனைப் பயிற்சியாக மட்டுமே இருக்கும்.

 

 

பாகம் – 15 >>

<< பாகம் – 13

_____
CAPital

1 Comment »

  1. […] << பாகம் – 14 […]

    Pingback by தமிழ் ஒருங்குறி ?! -15 « ஒரு பார்வை — August 28, 2006 @ 4:04 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: