ஒரு பார்வை

June 9, 2006

நாதியற்ற தமிழர் நாம் – 1

Filed under: India,LTTE,Tamil Nadu,War of Tamil Eelam — CAPitalZ @ 4:35 pm

ஒரு நாடாக தன்னை நாடி வரும் அகதிகளுக்கு மனிதாபிமான முறையில் தமிழ் நாடு/ இந்தியா உதவிகள் செய்திருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.

ஆனால், ஒரு தமிழ் அரசாங்கம் என்னும் முறையில் இன்னொரு தமிழனுக்கு துன்பம், நிகழ்கிறதே அதற்காக மேலதிகமாக எதாவது செய்ததுண்டா?

மனிதாபிமான முறையில், உலகிலுள்ள அனேகமான நாடுகள் ஈழத்தமிழனுக்கு உதவி செய்திருக்கிறார்கள். தமிழ் நாடு செய்ததற்கு குறைவில்லாமல் எல்லா ஐரோப்பிய நாடுகளும் செய்திருக்கின்றன. ஏன் கனடாவில் நாட்டின் பிரஜா உரிமை கூட கொடுக்கிறார்கள். அரசியலில் கூட பல தமிழர்கள் இப்போது துளிர்களாய் கால் எடுத்து வைக்கிறார்கள். நம்மவர்கள் பலர் வியாபாரத்தில் முன்னேறியிருக்கிறார்கள். பல்கலைக் கழக பேராசிரியராய் இருக்கிறார்கள். இங்கு மாத்திரம் அல்ல. உலகில் எங்கெல்லாம் ஈழத்தமிழன் அகதியாய் சென்றானோ, அங்கெல்லம் அவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்த வரையில், உலகிலுள்ள ஏனைய நாடுகளை விட [இந்தியா உட்பட] Norway இக்கு ஈழத்தமிழன் எவ்வளவோ நன்றிக்கடன் உள்ளவனாக இருக்க வேண்டும். அகதிகளுக்கும் இடம் கொடுத்து, எங்களுக்கு நேர்மையாகவும் மத்தியச்தம் செய்கிறார்கள்.

ஈழத்தமிழன் அரச பாடசாலையில் பயில இயலாது என்னும் சட்டம் தமிழ் நாட்டில் இருந்ததாம். இப்பவும் இருக்கிறதோ தெரியவில்லை. அகதிகள் அகதி முகாம்களில் அடைக்கப்ப்டுகிறார்கள். வெழியேறினால், புலி தப்பி ஓட்டம் என்னும் செய்திகள். என்னையா தமிழனுக்கு தமிழ் அரசாங்கம் செய்யும் மிகப் பெரிய உதவிகள் இவைதாமோ?

தமிழனுக்கு என்று ஏதும் சலுகையோ அல்லது மேலதிக உதவிகளோ தமிழ் நாட்டு அரசாங்கத்தால் புலிகளுகு வழங்கப்படவில்லை [except MGR]. அன்று குட்டிமணி தொடக்கம் இன்று கிட்டு வரை இந்திய அரசாங்கத்தாலேயே இறந்தார்கள். போதாததற்கு, தழிழீழத்திலும் வந்து, கொன்று குவித்தார்கள். அந்தக் காலத்தில் சிங்களப் படை பெண்களை பலவந்தம் செய்தது கிடையாது (அ) அரிது. இந்திய இராணுவம் வந்த பின்பே பெண்களும் பயப்பட ஆரம்பித்தார்கள். ஒரு சந்தியில் புலி குண்டு வைத்து வெடித்தால், அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டிலுள்ளவர்களுக்கு சணல் பறந்த அடி. அதில் வயது வித்தியாசம் இல்லை. இந்தியனை விட சிங்களவனே மேல் என்று சொன்ன நாட்களும் உண்டு. இந்திய இராணுவத்திடமிருந்து கற்றதைத் தான் இப்போ சிங்கள இராணுவம் செய்து வருகிறது.

ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டவுடன், பல ஈழத்தமிழர்கள் வெட்டிக் கொலைசெய்யப் பட்டார்கள் தமிழ் நாட்டிலே. இது ராஜீவ் கொலை புலிகள் தான் செய்தார்கள் என்று அரசாங்கம் அறிவிக்க முன்னம்.

தமிழ் அரசு, அயல் நாடு, தாய் நாடு, என்ன பயன். தமிழனுக்கு ஆதரவாய் அரசாங்க சார்பாக ஒரு குரல் கொடுத்துதா? ஒரு சில அரசியல்வாதிகள் செய்தார்கள், ஆனால் அவர்களையும் சிறை வைத்தது தமிழ் நாட்டு அரசு. ஏன் இப்போது கூட மத்திய அரசின் முடிவு தான் என் முடிவு என அறிவித்திருக்கிறார்கள். நாதியற்ற தமிழர் நாம்.

என்னதான் இருந்தாலும், ஒரு தமிழனாய் தன் இனம் படும் துன்பத்திற்கு உதவி செய்யவில்லை தமிழ் நாட்டு அரசு. மற்றய நாடுகள் போல் மனிதாபிமான அடிப்படையில் தான் உதவி செய்தது.

நாதியற்ற தமிழர்கள்

பாகம் – 02 >>

______
CAPital

2 Comments »

  1. my beloved one
    you are absolutly correct in saying this ,Tamilian every where should be united to find a our own country like isrel, may be this war prolong, but in the end we will come out. the govt in tamilnadu ruled now by DMK, the leader is a short sighted person, he is doing every thing only for the sake of next election, not for tamil ,or tamilian cause, the only way is to depend on ourselves. may the fight for right continue till victory comes in abundance
    love
    easwaran
    india
    bangalore

    Comment by easwaran — June 11, 2006 @ 9:47 pm | Reply


RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

%d bloggers like this: